அரசியல், குறும்படம், பாடல், விமர்சனம், கதை, அன்பு, எதிர்நோக்கு, வாழ்க்கை, விழிப்புணர்வு, நம்பிக்கை, மகிழ்ச்சி.....

Search This Blog

A white lie, பொய் பொம்மைகள்

பொய் பொம்மைகள்

        உண்மையே கடவுள் என கண்டார் காந்தியடிகள். உண்மைக்கு சான்று பகரவே வந்தேன் என்றார் இயேசு. 'உண்மையா அது என்ன?' என்ற கேள்வி இன்றும் கூட பதில் ஈட்டுத்தர இயலா கேள்வியாகவே உள்ளது.
     இன்று ஊனமான உண்மைகைள் உண்டு நிழல்களான நிஜங்கள் உண்டு.
ஒரு வாரத்தில் பெற்றிடுவீர் சிகப்பழுகு என்கிறது ஒரு விளம்பரம். இந்த ஆடையினை அணிந்தால்தான் நீங்கள் முழுமையான நபர் (pநசகநஉவ அயn) என்கிறது இன்னொரு விளம்பரம்.
      ஒவ்வொரு சராசரி மனிதனுக்கும் ஒவ்வொரு விளம்பரமும் 'பொய்' என்று தெரியும். எனினும் பொய்யை மெய், மெய் என்று அழுத்தம் கூட்டி மீண்டும் மீண்டும் காதில் ஓதுவதால் பொய்கள் மெய்களாகின்றன. நிழல்கள் நிஜங்களாகின்றன.
      இதனைத்தான் விளையாட்டாக சொல்வார்கள். ஒருமுறை திருவள்ளுவர் தோன்றி திருக்குறள் பாடத்திற்கு தேர்வு எழுதப் போனாராம். பாவம் திருவள்ளுவர் தேர்வில் தோற்றுப் போனாராம், காரணம் கேட்டதற்கு கோனார் தமிழ் உரையின் படி விடையளித்தால்தான் தேர்ச்சி பெற முடியும் என்ற பதில் வந்தது.
      விளம்பரம் நம்மை ஆள்கிறது, அழிக்கிறது. உண்மைக்கு எதற்கு பொய்யான விளம்பரங்கள். மலர் மணக்கும் என்று விளம்பரப்படுத்த தேவையில்லை.
மாம்பழம் கசக்கும் என்று நம்ப வைக்கத்தான் விளம்பரம் தேவைப்படுகின்றது.
       இப்படியே போனால் ஒருவனை பார்த்து மற்றொருவன் நீ ஒரு பொம்மை, பொம்மை என்று அவன் காதில் அழுத்தமாக மீண்டும் மீண்டும் கூறி அவனை தலையாட்டி பொம்மையாக மாற்ற்p பிணை கைதியாக்குகின்றான்.
மெய்யான மனிதன் பொய்யானது எப்போது?