அரசியல், குறும்படம், பாடல், விமர்சனம், கதை, அன்பு, எதிர்நோக்கு, வாழ்க்கை, விழிப்புணர்வு, நம்பிக்கை, மகிழ்ச்சி.....

Search This Blog

தன்மான தங்க தமிழ் தலைவர்கள், Selfish Leadership

தன்மான தங்க தமிழ் தலைவர்கள்

இன்றைய உலக தலைவர்களின் அடையாளமே 'சுயநலம்' என்று சொன்னால் அது மிகையாகாது. தங்கத் தலைவர்களுக்கு உடல்நலம் குறைந்தால் கூட சுய நலம் குறைவதில்லை.

                      தமிழர்கள் ஈழத்தில் கொத்து கொத்தாய் கொல்லப்படும் போது டெல்லி பயணிக்காது கடிதத்தில் பயணித்த தமிழ் தலைவர், நேற்று தமிழ் மீன்வர்கள் இலங்கை ராணுவத்தினரால் கொல்லப்படும் போது கடிதத்தில் மட்டும் டெல்லி சென்ற தலைவர் இன்று தொகுதி பங்கீடு என்று வரும் போது உடல்நலம் குறைந்தால் கூட டெல்லி செல்வதை சுயநலம் என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்வது.

                தமிழர்களின் உணர்வுகளில் பங்குக் கொள்ளாத தலைவர்கள் தமிழர்களுக்கு தலைவர்களாய் இருப்பதற்கு தகுதி கிடையாது.

இவர்களே நம் தங்க தமிழ் தன்மான தலைவர்கள்...

இனம் கண்டு கொள்ளுங்கள் இவர்களை!

நாம் ஓர் தமிழ் இனம் ஒன்றிணையுங்கள்!

Small is Powerful

Small is Powerful

உலகில் பெருத்துப்போன அதி பயங்கரமான, கொடுரமான மிருகங்கள் எல்லாம் அழிந்துப்போயின. ஆனால் சிறிய தேவையற்றவை என உலகம் கருதிய பூச்சிகள், வண்டுகள், நுண்ணுயிரிகள் இன்னும் அழியாமல் இருப்பதற்கு காரணம் அவைகளின் ஆற்றலும் சூழலுக்கேற்ப அதன் வளைந்துக் கொடுக்கும் சக்தியுமே ஆகும்.

உலக பரிணாமத்திற்கும் அதன் பாதுகாப்பிற்கும் இத்தகைய நுண்ணுயிரிகள், புளு பூச்சிகளின் பங்கேற்பு மிக பெரியது.
என்று இத்தகைய நுண்ணுயிரிகள் அழிக்கப்படுகின்றனவோ அன்றே தொடங்கிவிட்டது உலகின் அழிவு என்று நாம் கண்டிப்பாக சொல்ல முடியும்.
இறந்த பிராணிகளை தின்று இடத்தை சுத்தப்படுத்துவது நுண்ணுயிரிகள். ஒரு முத்திய பழத்தை, விழுந்த இலையை அழுகச்செய்து உரமாக்;குவதும் இந்த நுண்ணுயிர்களே..

மண்ணுக்கு உயிர்சத்தை கொடுப்பது இந்த நுண்ணுயிர்களே.
ஒன்றுக்கு மற்றொன்று இரையாவதும் இதனால் உயிர் தளைக்க செய்வதும் இந்த நுண்ணுயிரினாலேயே.

உலகில் நுண்ணுயிர் இல்லையென்றால் கனவிலும் நாம் வாழ முடியாது.
பூச்சிகளை கொல்லுகின்றோம் என்று சொல்லிக்கொண்டு பூச்சிக்கொல்லி மருந்துக்களை தெளிக்கின்ற போது உணவை நஞ்சாக்குவது மட்டும் அல்ல பல கோடி நுண்ணுயிர்களையும் சேர்த்தே நாம் கொலை செய்கின்றறோம்.

சின்ன பூச்சிகளில் இருக்கும் அதிசயத்தை, பயன்பாட்டை கண்டு வாழ்கை தத்துவத்தை புரிந்துக்கொள்ள முடியும்.

இன்று யானையின் சக்தியே உயர்ந்தது என்று சொல்லுகின்ற மனநிலை போய் சிறு புளு பூச்சிகளின் சக்தியே அதிசயதக்கது, அளபெரியது என்று விஞ்ஞான உலகமே அதிசயித்து நிற்கின்றது.

ஆளை, மூளை பார்த்து உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று எடைபோட்டு ஏமாந்து போகாதே, ஏழ்மை, எளிமை அனுபவித்து உலகின் ஆன்மீகம் அறிந்துக்கொள்.


பிளவுப்படாத நெஞ்சத்தினராய் வாழ, To live with undivided heart

பிளவுப்படாத நெஞ்சத்தினராய் வாழ 

கல்லெறி விழா கேள்விப்பட்டிருக்கின்றீர்களா? மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிர எல்லைப்பகுதியில் பந்துர்னா என்ற கிராமத்தில் இவ்விழா சீறும் சிறப்புமாக கொண்டாடப்படுகின்றது. இப்பகுதியில் ஜாம் நதி என்ற ஒரு நதி இருக்கின்றது இந்த நதியின் இவ்விழாவின் போது இரு கரையிலும் மக்கள் திரளாக கூடிவருவர். கற்கள் வண்டி வண்டியாக குவிக்கப்படும். மது பானங்கள் விற்பனை சூடு பிடிக்கும். மேள தாளங்கள் முழங்க கல்லெறி விழா ஆரம்பமாகும். இரு பக்கங்களிலிருந்தும் மக்கள் கற்களை வீசி எறிவர். கற்கள் காயங்களை ஏற்படுத்தும் காயங்கள் சாமி கொடுத்த வரங்களாக பார்க்கப்படும். இரத்தம் வழிய வழிய மக்கள் விழா கொண்டாடுவர்.
இத்தகைய விழாக்கள் தமிழ் நாட்டிலும் கொண்டாடப்படுகின்றன. சமீபத்தில் கிறிஸ்துமஸ் விழாவின் போது ஒருவருக்கொருவர் இரத்தத்தால் திலகமிட்டுக் கொண்டனர். சூலாயிதம், ஈட்டி, கம்பு கட்டைகள் என்று ஆயுதங்களுடன் களமிரங்கிய கூட்டம் ஒருவர் ஒருவரை தாக்கி விழா கொண்டாடினர்.
இத்தகைய விழாக்கள் இன்று பல ஊர்களில் சாதி கலவரங்களாக, மத கலவரங்களாக, கோஷ்டி பூசல்களாக அரங்கேறுகின்றன. நாம் நம்மை பிளவுப்படுத்தி விட்டோம். பிளவுகள் நம்மை காயப்படுத்துகின்றன, நம் வளர்ச்சியை கட்டுப்படுத்துகின்றன, நம் மாண்பை கறைப்படுத்துகின்றன.

மௌனத்தின் ஓசை, Song of silence


மௌனத்தின் ஓசை 

ஒரு காலைப் பொழுது பேருந்து நிறுத்தத்தில் நின்றுக்கொண்டிருந்தேன். வாகன சத்தங்கள் மௌனத்தை குலைத்துக்கொண்டிருந்தன. கடையோரச் சந்தையின் மக்கள்; சத்தங்களும், மாணவ மாணவிகளின் ஒலி சத்தங்களும், சாலை பராமரிப்பு பணியாளர்களின் பணி சத்தங்களும் என் வார்த்தைகளே எனக்கு கேட்கமுடியாத தருணத்தில் இரண்டு மாணவர்களின் மௌன மொழிகள் என் கவனத்தை ஈர்த்தன. பல்வேறு இறைச்சல் சத்தங்களுக்கு மத்தியில் வாய் பேச முடியாத இவர்களின் கை, கண் செய்கைகள் என் மனதினுள் பேரோலியாக பதிந்தன.
            
            அன்று தான் நான் புரிந்துக்கொண்டேன் மௌனத்தின் ஓசை ஓங்கி ஒலிக்கும் என்று. இறச்சலின் சலசலப்புக்குள் சென்று தேடிப்பாருங்கள் உங்களுக்காய் சில மௌனங்கள் உங்களை மௌனியாக்க காத்துக்கிடக்கின்றன.

தமிழக மீனவர்களுக்காக செவிடர்களின் காதில் மீண்டும் ஒரு கதறல்

தமிழக மீனவர்களுக்காக செவிடர்களின் காதில் மீண்டும் ஒரு கதறல்


தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காக புறக்கணிக்கப்பட்டு வந்த தமிழக மீனவர்கள் இன்று கொன்றழிக்கப்படுவதை தினம் தினம் நாம் பார்க்கின்றோம்.
பல நூறு கண்துடைப்பு கடிதங்கள் எழுதினப்பிறகும், பல தரப்பட்ட பேச்சு வார்த்தை நடத்தப்பட்ட பிறகும் தமிழ் மீனவர்களின் வாழ்வில் மாற்றம் ஒன்றும் இல்லை. கடந்த பத்து நாட்களில் 2 மீனவர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

நமக்காக பேச நாதியில்லை...
நாம் நம்பியவர்கள் நம்மை கைவிட்டு விட்டனர்...
பத்து நாள்களுக்கு முன்பு நாகையை சார்ந்த வீரபாண்டியன்,
நேற்று புஷ்பவனத்தை சேர்ந்த ஜெயக்குமார்....
நாளை நீயும் நானும்...
நமக்காக பேச ஆளில்லை....
நமக்காக போராட யாருமில்லை...
அடுத்தவனை நம்பி ஏமாந்த காலம் போதும்...
தமிழா நீ வாழப் பிறந்தவன்...
ஆளப்பிறந்தவன்....
இன்று வாழ்க்கையும் நம்கையில் இல்லை
ஆட்சியும் நம்கையில் இல்லை
பிளவுகள் போக்கி தமிழனாய் நிமிர்ந்து நில்
புறப்;படு ...
படையெடு....
புரட்சி செய்...
விடுதலையின் விழுதுகள் நீயானால்
விடியலில் நம் கனவு நனவாகுமே...




'மாற்றம் தேடும் இளையோர்', Youth; lovers of change


'மாற்றம் தேடும் இளையோர்'

உருவமற்ற கோடுகள் ஓவியரின் தூரிகை படப்பட ஓவியங்களாகின்றன. மாற்றம்  வேண்டும் என்று கனவுக் காணும் இளையோருக்கு கனவு என்பது தூங்கும் போது வருவதல்ல தூங்க விடாமல் செய்வதே கனவு. இத்தகைய கனவுகளும் கற்பனைகளும் தான் இளைய இந்தியாவை மாற்றப்போகின்றன.
ஒரு குடிசையுள் படுத்துக் கொண்டு விறகு வெட்டியின் மகன் கண்ட வெள்ளை மாளிகைக் கனவுத் தான் ஆபிரகாம் லிங்கனை அமெரிக்க நாட்டு அதிபராக்கியது.

இந்திய நாட்டின் சாம்பிராணியைக் கப்பலில் அள்ளி வர வேண்டுமென்ற மாசிடோனிய இளைஞனின் கனவுதான் உலகை வென்ற மாவீரன் அலெக்சாண்டர் ஆக்கியது.

    இந்திய விடுதலையை புரட்சி வழியில் அடைய வேண்டும் என்ற கனவில் உதயமான இளைஞனே பகத் சிங்.

    இவ்வாறு கனவுகள் இளையோருக்குள் மாற்றத்தையும் இளையோரால் சமூக அரசியல், பொருளாதார, சட்ட, சமய துறையில் பெரும் மாற்றத்தை கொண்டு வருகின்றது.

    இளைஞன் என்பவன் எல்லையற்ற ஆற்றல்களின் ஊற்று. கணக்கி;ட முடியாத திறமைகளின் புதையல். நமது நாட்டில் மூன்றில் இரண்டு பகுதி இளையோர் உள்ளனர். எனவே திறமையும் அணுவை விட பேராற்றலும் கொண்ட நமது நாட்டை 'இளைய இந்தியா என்று சொல்வதில் தவறில்லை.

    'லஞ்சம் வாங்கினேன் கைதுசெய்தார்கள் லஞ்சம் கொடுத்தேன் விடுதலை செய்தார்கள.;' நமது நாட்டில் சட்ட ஒழுங்கு சாமாநிய மனிதர்களுக்கு எதிராகவே உள்ளது. போபால் விச வாய்வு கசிவில் குற்றம் சாட்டப்பட்ட ஆன்றர்சன் முதல் 2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் மாட்டிக்கொண்ட முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் திரு ராசா வரை சட்டத்தின் பிடியிலிருந்து எழிதில் தப்பிக்கொண்டவர்கள். எனவே தான் இளைஞன் ஒருவன் எழுதினான், சட்டம் என்பது ஒரு சிலந்தி வலையைப்போன்றது. பெரிய பெரிய வண்டுகள் வலையை கிழித்துக்கொண்டு தப்பி விடுகின்றன. சிறிய பூச்சிகள் மட்டும் பரிதாபமாக மாட்டிக்கொள்கின்றன.

    எனவே மாற்றத்தை நேசிக்கும் இளைஞன் சட்டத்துறையில் கால் பதி;த்து அரசியல் சாசனம் வகுத்துக்கொடுக்கும் உரிமைகளை மக்கள் தடையின்றிபெற்று மாண்போடு வாழ இளைஞர்கள் தங்களை அர்ப்பணிக்க முன்வர வேண்டும்.

    ஒளிர்கின்றது இந்தியா என்றார்கள். ஆனால் இன்று விலைவாசி உயர்வால,; கோடிக்கணக்கான ரூபாய் ஊழலால் பாமர மக்களின் வயிறு தான் பற்றி எரிகின்றது. இந்திய பொருளாதாரத்தில் ஒவ்வொரு இளைஞனின் வியர்வையும் உழைப்பும் உண்டு. இளைஞர்களுக்காக இளைஞர்களால் வளர்க்கப்பட்ட இந்திய பொருளாதாரத்தை சுரண்டும் பெருச்சாளிகளுக்கு எதிராக மாற்று பொருளாதார கோட்பாட்டினை வரையறுத்து ஏழைகளே இல்லாத இந்தியா மலர்ந்திட இளைய சமூதாயம் உறுதிப்பூண்டிட வேண்டும்.

     அரசியல் என்ற மக்கள் அதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு மக்களின் உரிமைகளையும் உடமைகளையும் கூறுப்போட்டு விற்று ஏப்பம் விடும் அரசியல் வித்தகர்களுக்கு எதிராக நிலைப்பாடு எடுக்கவும் அரசியல் களத்தில் மாற்றம் கொண்டு வரவும் இளையோர் பெருந்திரளாக அரசியல் களம் காண வேண்டும்.

    அந்நியர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்தப்போது இந்தியாவில் சிறைச்சாலைகள் இருந்தன. சுதந்திரத்திற்குப் பிறகோ இந்தியாவே ஒரு சிறைச் சாலையாகிவிட்டது.

    இச்சிறைச் சாலைகளிலிருந்து இந்திய மக்களை விடுவிக்க பிறந்தவர்கள் இறையோரே. என்று மாற்றம் வரும் என்று விம்மி வாடும் கோடிக்கணக்கான மக்களை விடியலின் வாசலில் கொண்டு வரும் பெரும் பணி இன்றைய இளையோரதே.

    வெந்ததை தின்று விதி வந்தால் சாவோம் என்றிருப்போமானால்  அதனை மண்ணும் செய்யும் மரமும் செய்யும்;. மாற்றம் நேசிக்கும் இளைஞனே மாற்றமானால் இனி இளையோருக்கு ஏமாற்றம் என்பது இல்லை.

    வாழ்க்கை என்பது ஒருமுறை வாழ்த்தட்டும் தலைமுறை. வீழ்ந்துக் கிடந்தால் இளைஞனே உன்னை சிலந்தியும் சிறைவைக்கும். நீ எழுந்து நின்றால் உலகமே உனக்கு தலைவணங்கும்.

பொங்கவேண்டியது நம் வீட்டு பானைகள் மட்டும் அல்ல நம் உணர்வுகளும் எண்ணங்களும்...

பொங்கவேண்டியது நம் வீட்டு பானைகள் மட்டும் அல்ல நம் உணர்வுகளும் எண்ணங்களும்...

தைப் பிறந்தால் வழிப் பிறக்கும் என்பார்கள். தமிழர் தமிழ் புத்தாண்டை இன்று சிறப்பாக கொண்டாடி மகிழ்கின்றனர். கல் தோன்றி மண் தோன்றா முன்பே தோன்றிய குடி தமிழ் குடி என்பது நாம் அனைவரும் அறிந்ததே. தமிழனின் பெருமையும் புகழையும் உலகமே அறியும். 100 நாடுகளுக்கு மேலாக பரவிக் கிடக்கின்றான் தமிழன் ஆனால் தமிழனுக்கென்று தனி நாடு இல்லை என்பது வேதனைத் தருகின்றது.

    தமிழ் என்றுச் சொல்லி செம்மொழி மாநாடுகளெல்லாம் நடத்தி பெருமை சேர்த்த தமிழன் மறுபுறம் தன்னை தமிழன் என்று சொல்லிக்கொள்வதற்கே தலை குனிந்துக்கொள்ளுகின்றான்.

    தனக்கு பிறந்த குழந்தை அம்மா என்று அமிர்த மொழி பேசுவதை கேட்டு மகிழாமல் ஆங்கில மொழியில் மம்மி என்று பேசுவதை கேட்பதிலேயே மயங்கிக் கிடக்கின்றான் தமிழன்.
    எனவே தான் தனக்கு அருகிலேயே தாய் மொழி வழிக் கல்வி இருக்க ஆங்கியல் படிக்க நெடும்பயணம் மேற்கொள்கின்றான் தமிழன்.
நாம் வாங்கும் உணவுப் பொருட்களில் மருந்துப் பொருள்களில் கலப்படம் என்றால் வெகுண்டு எழுகின்றோம் ஆனால் நாம் பேசும் மொழியில் கலப்படம் என்றால் அதனை நாகரிகம் என்று மழுப்புகின்றோம்.

தமிழ் மொழியின் பாடு இப்படியிருக்க தமிழர்களின் பாடோ அதோகதிதான். இலவச கலாச்சாரம் அவன் கண்ணை கட்டிப்போட்டுள்ளது. டாஸ்மார்க் பண்பாடு கோடிக் கணக்கில் அரசுக்கு வருமானத்தையும் தெருக்கோடியில் அவனுக்கு படுக்கையையும் அமைத்துக் கொடுக்கின்றது.

மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன்குடம் என்பது போல தழிழர்கள் என்றால் ஒரு நீதியும் தமிழர் அல்லாதவர்கள் என்றால் வேறு நீதியும் செயல் படுவதை காண முடிகின்றது.

காவேரிக்கும் முல்லை பெரியாருக்கும் கைஏந்தி நிற்கும் அவல நிலையில் தமிழ் விவசாய்கள் நிற்கின்றனர். தானும் விவசாயம் செய்ய வழியில்லாமல் உணவுப் பொருட்களை வாங்கி உண்ணவும் முடியாமல் விலைவாசி உயர்வாலும் கடன் பிரச்சினையாலும் தற்கொலை செய்துக்கொள்ளும் விவசாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேயிருக்கின்றது.

விவசாயம் தான் அப்படி என்றால் கடல் தொழில் செய்யும் கடலோடிகளின் கதி ஆதோ கதியாகத்தான் இருக்கின்றது.

ஆஸ்திரேலியாவில் வடநாட்டவர் ஒருவர் தாக்கப்பட்டால் இந்திய அரசே கொதித்தெழுகின்றது. ஆனால் நமது இராமேஸ்வரத்தில் தினம் தினம் இலங்கை கடற்படையினரரால் பாதிக்கப்படுகின்ற தமிழ் மீனவர்களின் அவல குழுரல்கள் கடல் அலைசத்தத்தோடேயே கலந்துக் கிடக்கின்றது.
இலங்கை சிறையிலும் கத்தார் சிறையிலும் மாறி மாறி சிறை வாசம் செய்யும் தமிழ் மீனவர்களின் சிறைவாசம் தாய் மண்ணிற்கு வந்தப்பிறகும் தொடர்கதையாகிப் போவதை பார்க்க முடிகின்றது.

தமிழக் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா! என்னும் வார்த்தை ஜாலங்கள் பொய்த்துப் போய் தழிழன் தலைநிமிர்ந்து விடக்கூடாது என்னும் போக்கு தான் தலைநிமிர்ந்து நிற்க்கின்றது.

அன்னியர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து நின்று போரிட்டதால் இந்திய விடுதலைப் பெற்றது. இன்று தமிழர்களின் பகுதியில் வாழ்வது தமிழர்கள் என்றாலும் காலம்காலமாக ஆழ்வது அன்னியர்களே.
இன்று தெலுங்கானா பிரச்சினை என்றால்  அப்பகுதியைச் சேர்ந்த  எல்லா கட்சி அரசியல் தலைவர்களும் எல்லா சாதிய மக்களும் தனி தெலுங்கானா எனும் ஒரே ழுழக்கத்துடன் அணித்திரண்டு நிற்கின்றனர்.

கொத்துக் கொத்தாய் தமிழர்கள் ஈழத்தில் அழிக்கப்பட்டாலும், ராமேஸ்வரத்து மீனவர்கள் சுடப்பட்டாலும், சாதியின் பெயரால் சமயத்தின் பெயரால் அரசியல் கட்சிகளின் பெயரால் நாம் பிளவுப்பட்டுக்கிடக்கின்றோம். மறுத்த இதயம் படைத்த மக்கள் நாமாகிப்போனோம்.

மீனவர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் நமக்கு என்ன என்று விவசாய மக்களும், விவசாய்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் நமக்கு என்ன என்று மீனவர்களும் ஒதுங்கிக் கொள்வதனால் நம்மை ஏமாற்றி பிழைப்பவனே வெற்றி பெறுகின்றான். பிளவுப்பட்டுக்;கிடக்கும் வரை பிளவுப்படுத்துபவனுக்கே கொண்டாட்டம்.

இன்று பொங்கவேண்டியது நம் வீட்டு பானைகள் மட்டும் அல்ல நம் உணர்வுகளும் எண்ணங்களும்...