அரசியல், குறும்படம், பாடல், விமர்சனம், கதை, அன்பு, எதிர்நோக்கு, வாழ்க்கை, விழிப்புணர்வு, நம்பிக்கை, மகிழ்ச்சி.....

Search This Blog

Responsibility, பொறுப்பு

பொறுப்பு

 
          உலகப் பாவங்களில் எல்லாம் மிகப்பெரிய கொடும் பாவம் பொறுப்பேற்காத தன்மை. பொறுப்பேற்காமை என்பது நம்முடைய மொழி, பழக்கவழக்க கலாச்சாரங்களில் நியாயப்படுத்தப்படுகின்ற ஒன்றாக திகழ்கின்றது. நாம் முள்ளை மிதித்தாலும் காலில் முள்ளேற்றிக்; கொண்டாலும், முள் குத்திவிட்டது என்று முள்ளின் மீதுதான் பழியை சுமத்துகின்றோம். நாம் பொறுப்பேற்பதில்லை.

எதாவது நம்மால் கீழே விழுந்து உடைந்துப்போனால், நான்தான் உடைத்தேன் என்று பொறுப்பேற்பதில்லை. கீழே விழுந்து உடைந்துவிட்டது என்றுதான் கூறுகின்றோம்.
சிறிய சிறிய நிகழ்வுகளில் தொடங்கி இயல்பாகிப் போன இந்த பொறுப்பற்ற மனநிலை இதரச் சமூக சூழல்களிலும் பிரதிபலிப்பதை நாம் உணர்கின்றோம்.
உலகின் நிகழ்வுகளுக்கு நாமும் ஒரு விதத்தில் பொறுப்பாளியாகின்றோம்.

தனக்கு பொறுப்பு இல்லை என்று ஒருவன் சொல்வானெனில் அவன் பாவம் செய்கின்றான

Prayer இறை வேண்டல்

இறை வேண்டல்

     மனிதன் பரிணாம வளர்ச்சி பெறுவது போன்று அவன் செபிக்கும் முறையும் பரிணாம வளர்ச்சி பெறுகின்றது.

குழந்தையாய் இருக்கும்போது நடை பழக வேண்டுமென்றால் மூன்று சக்கர கை வண்டி ஒன்று தேவைப்பட்டது. நடக்க பழகினப் பிறகும் கைவண்டிதான் வேண்டும் என்று எவரும் அடம்பிடிப்பதில்லை.
அதேபோன்று குழந்தையாய் இருக்கும்போது பிறர் சொல்லிக் கொடுத்த அல்லது பிறர் அனுபவத்திலிருந்து எழுதிய செப முறைகள் நமக்கு தேவைப்பட்டன. நாமும் உன்னிப்பாய் எழுத்தின் பொருள் புரியாத போதும் பிழையின்றி வாசித்து செபித்தோம்.
நான் பள்ளி பருவ மாணவனாய் இருந்தபோது நானாக எனக்கு வேண்டியவற்றை கடவுளிடம் மன்றாடினேன். ஏனெனில் கடவுள் கேட்பதை எல்லாம் தருவார் என்று எண்ணினேன். பரிட்சையில் எப்படியாவது தேர்ச்சி பெற்றுவிட வேண்டும். இன்று குறிப்பிட்ட வாத்தியார் பள்ளிக்கு வரக்கூடாது... இப்படி பல.
கல்லூரிக்கு வந்தபிறகு இறைவேண்டலில் சற்று மாறுபட்டேன். கடவுள் ஏற்கெனவே பல நற்கொடைகளினால் வளர்ச்சிபெற செய்திருக்கின்றார். இன்னும் என்ன கடவுளிடம் அது வேண்டும், இது வேண்டும் என கேட்பது. பேசாமல் அவர் அருளிய கொடைகளுக்காக நன்றியும், புகழ்ச்சியும் மட்டும் செய்தால் போதும் என்று முடிவெடுத்தேன்.
இறையியல் பயின்ற நாட்களில் மீண்டும் இறை வேண்டலுக்கு பற்பல அர்த்தங்களும் செப முறைகளும் கற்றுக்கொண்டேன். இறை வேண்டல் என்பது, கடவுளுடன் உரையாடல், உறவாடல், உணர்ந்திருத்தல், சும்மா இருத்தல், சிக்கென பற்றிக் கொள்ளுதல், பரவசமடைதல், பசித்திருத்தல், அன்பு செய்தல், கடவுளை தியானித்தல், இப்படியாக இன்னும் பல.
என்னதான் இறைவேண்டலுக்கு அர்த்தங்கள் ஆன்மீகங்கள் ஆயிரம் இருந்தாலும் இன்று எனக்கு இறைவேண்டல் என்பது இறை/மக்களோடு உடனிருப்பதே.



The Sound of Justice, நீதியின் சத்தம்

நீதியின் சத்தம்

        கருப்புச்சாமி வாழ்க்கையின் விழிம்பில் வாழ்பவன். தினம் தினம் மாடாய் உழைத்தால் தான் வயிற்றை நிரப்ப முடியும். திருமணம், மனைவி, மக்கள் என்றானப்பிறகு அதிக நேரம் உழகை;கவேண்டிய கட்டாயம். பணத்தேவை அதிகமானப்போது உரிய வேலை கிடைக்கவில்லை. விலைவாசி நாளுக்குநாள் மலைப்போல உயர்ந்துக்கிட்டேப்போகுது. கிடைக்கிற கூலிய வைச்சி புள்ளைகள எப்படி கரைச்சேர்க்கிறது.

கருப்புச்சாமி எந்த காரியம் செய்ய வந்தாலும் அது உருப்படாமதான் போச்சு. ஊழல், லஞ்சம் கலாச்சாரத்துல அவனால போட்டிப்போட்டுக்கிட்டு வாழமுடியல. காய்கறி வியபாரம் தொடங்கினான் அவன் முன்னாலேயே பெரிய சூப்பர் மார்க்கட் வந்து அவன் பொளைப்ப கெடுத்தது. கடனக்கிடன வாங்கி பொட்டிக்கட வைச்சி பொளச்சிக்கலாம்னு பார்த்தான். மாமூல் கேட்டு போலீசு காரனுவ தொந்தரவு தாங்க முடியல. பி;ள்ளைங்க பட்டினியிலயும், பன்றிக் காய்ச்சலுலேயும் சாவுதுங்க. கடன் காரன் கழுத்தை நெறிக்கிறான்.

கருப்புச்சாமி விரக்தியின் உச்சத்துல, டாஸ்மார்க் மப்புல, ரோட்டு மத்தியில நின்னுக்கிட்டு, 'நாய் பொழைப்புடா இது' னு கத்தினான். நடு ரோட்டுல நின்னுக்கிட்டு நாலு பேறு பாக்கிறது மாதிரி கூச்சல் கும்மாளம் போட்டுக்கிட்டு இருந்தான். போலீசு காரனுவ வந்தானுவ. நாலு சாத்து லத்தி கம்பால சாத்தினானுவ. வலி பொறுக்காம வாய்க்கு வந்தது போல உளறி தள்ளினான் கருப்புச்சாமி;. போலீசு கார பையலுங்க அப்படியே கருப்புச்சாமிய மாமியார் வீட்டுக்கு அள்ளிக்கிட்டு போயிட்டானுங்க.

கருப்புச்சாமிக்கு சுய உணர்வு வந்தப்போது கம்பிக்கு பின்னாடி கிடந்தான். நீதி மன்றம் அவனுக்கு 500 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தது. கருப்புச்சாமிக்கு ஒன்றுமே புரியல. ஏன் னு கேட்டது தப்பா? நீதிமன்றம் அவன் கைகள், கால்கள் மற்றும் தலையை வெட்டிப்போட தீர்ப்பளித்தது.

கைகள், கால்கள் மற்றும் தலை வெட்டப்பட்டு கருப்புச்சாமி நான்கு சுவற்றுக்குள் உயிரோடு கிடந்தான். தன் உடலை உருளச்செய்;து மீண்டும் மீண்டுமாக சிறைச் சுவற்றை மோதினான். ஒங்வொறு முறையும் அவன் சிறைச் சுவரை மோதும் போதும் பெரும் சத்தம் உருவானது.

ஒவ்வொறு முறையும் இச்சத்தம் கேட்கும் போது அரசியல் வாதிகளுக்கு நடுக்கம் ஏற்ப்பட்டது. பெறும் பணமுதலையர் அச்சமடைந்தனர். அரசு அதிகாரிகளின் உள்ளத்தில் உளி இறங்கியது. கருப்புச்சாமி சுவற்றில் மோதுவதை ஒருபோதும் நிறுத்தவில்லை. இதனால் நீதிக்கான சத்தமும் நிற்காமல் ஓங்கி ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

10 rupees note, பத்து ரூபாய் நோட்டு

பத்து ரூபாய் நோட்டு

         மனிதர்கள் பல வகை உண்டு. ஒங்வொருவரும் அவரவர் செயல்களிலிருந்து அறிந்துக்கொள்ளப்படுவர். கொடுத்தல் என்பது மனித செயல்பாடுகளில் ஒன்று. சிலர் தங்களிடமிருந்து சிலவற்றை பிறருக்கு கொடுப்பர். வேறு சிலர் தனக்கு போக மீதமிருப்பதை இல்லாருக்கு கொடுப்பர். மற்றும் சிலர் தன்னிடமிருந்த எல்லாவற்றையும் கூட கொடுத்து விடுவர். இவ்வாறு கொடுப்பது என்பது பல நிலைகளில் புரிந்துக்கொள்ளப்படும்.



ஒரு முறை சிறைப்பணிக்காக ஆலயம் ஒன்றின் முன்பாக நின்றுக்கொண்டு தட்டு ஏந்தி காணிக்கை (பிச்சை) வாங்கிக்கொண்டிருந்தோம். எங்களுக்கு போட்டியாக நிரந்தர பிச்சைக்காரர்களும் எங்கள் வரிசையில் உண்டு;. தட்டு ஏந்தி நிற்பதற்கு வெட்கமாகவே இருந்தது. போவோர் வருவோர் எங்களையே மேலும் கீழுமாகப் பார்ப்பது மிகுந்த தடுமாற்றத்தை ஏற்படுத்தியது. ஆயினும் ஓர் உயர்ந்த பணிக்காக இது ஒன்றும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திடவில்லை.



திருப்பலி முடிந்ததும் ஆயத்திலிருந்து வெளியே வருவோர் எங்கள் தட்டுகளை ஐம்பதும் நூறுமாக நிறைத்தனர். எனினும் அவரவர் மனதாழத்திற்கேற்ப தங்கள் காணிக்கையினை கொடுத்தனர். சிலரின் உடைகள் பளபளத்தாலும் உள்ளம் காணிக்கை போடுவதற்து தயாராக இல்லாமலே இருந்தது. காரில் வந்தர்கள் கூட காணாததுப் போல் சென்றனர்.



பாவம் ஞாயிறு தோறும் பிச்சைக்காகவே வரும் பிச்சைக்காரர்களுக்கு எங்களால் பெரும் இழப்பு ஏற்பட்டது. சில பிச்சைக்காரர்கள் எங்களையே வெறித்துப் பார்த்தனர். சிலர் விரக்தியில் விம்முவது காலை வெளிச்சத்தில் தெளிவாகவே தெரிந்தது. பிச்சைக்காரர் கூட்டத்திலிருந்த கந்தல் ஆடை உடுத்திருந்த பிச்சைக்கார பெண் ஒருவர் எழுந்து வந்து என்னருகில் தயக்கத்துடன் வந்தார். பலர் காசினை தட்டினில் போடுவதும் போவதுமாக இருந்தனர். தாழ்வுமனப்பான்மையால் கூனிக்கறுகி வந்த இப்பிச்சைக்காரப் பெண் தன் ஆடையின் நுணியில் கட்டி வைத்திருந்த பத்து ரூபாய் நோட்டு ஒன்றினை எடுத்து என் தட்டில் போட்டுக்கொண்டு தன் இடத்தில் சென்று வேகவேகமாக அமர்ந்துக்கொண்டார்.



பிச்சை எடுக்கின்றோமே என்று வெட்கி குனிந்த என் மனம் பிச்சைப்போட்ட பிச்சைக்காரியின் உயர்ந்த மனம் கண்டு நிமிர்ந்து நின்றது.







ISCHOOLU

www.youtube.com/user/jenithmedia

Law, சட்டம்

சட்டம்

“லஞ்சம் வாங்கினேன் கைது செய்தார்கள்

லஞ்சம் கொடுத்தேன் விடுதலை செய்தார்கள்”

என்று இன்றைய சட்டத்தின் அவலநிலையை, தன் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றார் புது கவிஞன் ஒருவர். சட்டம் என்பது ஒரு சிலந்தி வலையைப் போன்றது. பெரிய பெரிய வண்டுகள் எல்லாம் அதனை கிழித்துக் கொண்டு தப்பி விடுகின்றது. ஆனால் சிறிய சிறிய பூச்சிகளோ அதில் மாட்டிக் கொள்கின்றது. பணம் படைத்தவர்களும், அரசியல் செல்வாக்கு உள்ளவர்களும் சட்டத்தை ஏழைகளை வதைக்கும் சாட்டையாக பயன் படுத்துகின்றனர். சர்வதிகாரம் செய்ய விரும்புகின்றவர்களுக்கு சட்டமே முதல் ஆயுதமாக உள்ளது. எனவே தான் மக்கள் சார்பாக குரல் எழுப்புபவர்களை தாட, மிசா, போடா என்ற பெயரில் கைது செய்து வாய்மையின் வாயினை அடைக்கின்றனர்.

காற்றிற்கு கைவிலங்கு போடும் சமூகத்தில் வாய்மையே வெல்லும் என்ற நீதிமன்ற வாசகங்களுக்கும், கண்ணைக் கட்டிக் கொண்டு தராசை பிடித்துக் கொண்டு நிற்;கும் நீதி தேவதைக்கும் பொருள் இல்லாமல் போகின்றது. காக்கிச் சட்டையும் கருப்பு சட்டையும் தங்கள் ஆடைகளை கழற்றி வைத்து விட்டு எந்த கட்சி ஆளுகினறதோ அக் கட்சியின் கொடி வண்ணத்திலேயே சட்டை செய்து போட்டுக் கொள்ளுகின்றனர்.

நிலமை இப்படி இருக்க சட்டம் என்றச் சொல் வீட்டு சன்னல் கதவை மட்டும் குறிக்கும் சொல்லாகவே இருந்துவிடும்; நிலை உருவாகின்றது.

Jasmine - the story of a flower, மல்லிகை மொட்டு

மல்லிகை மொட்டு

         ஜூன் மாதம் மாலைநேரம் வாகன நெரிசல் நிறைந்த சாலை பகுதி. கூடு திரும்பும் பறவைகள் போன்று வீடு திரும்பும் மாணவக் கூட்டம். அலுத்துப்போய், களைத்துப்போய் 4 மணி பேருந்துக்காய் 5 மணியான பிறகும் காத்திருக்கும் உழைக்கும் வர்க்கம். ஊனமாய், ஊமையாய் சாலையோரத்தில் நடுத்தர வயது பெண் மல்லிகை மொட்டுக்களை வேக வேகமாய் தொடுக்கும் காட்சி என் மனதில் சலசலப்பை ஏற்படுத்தியது. விரல்கள், பின்னல் வேலைபாடுகளில் மூழ்கிகிடந்தாலும் யாராவது  பூ வாங்க வரமாட்டார்களா என்ற ஏக்கம் கண்களில் மையம் கொண்டிருந்தது.

ஏன் இந்த துரிதம்? தெரியவில்லை. ஏன் இந்த ஏக்கம்? புரியவில்லை. என் சிந்தனை இந்த விரல்களின் வேகத்திற்கு காரணம் தேடி சிறகடித்தது.

ஒருவேளை, படுத்த படுக்கையாய் கிடக்கும் தன் கணவனுக்கு மருந்து மாத்திரை வாங்க பணம் தேவைப்படுமோ!

அல்லது தினம் பசியால் தூங்கும் பிள்ளைகளுக்கு இன்றாவது நல்ல சாப்பாடு சமைத்துப் போட வேண்டும் என்ற எண்ணம் இருந்திருக்குமோ!

தினம் தினம் வந்து வட்டி பணம் கேட்டு நச்சரிக்கும் கடன்காரன் தொல்லையிலிருந்து இன்றாவது விமோச்சனம் கிடைக்க வேண்டும் என்பதற்காக இருக்குமோ!

அல்லது கிழிந்த சட்டையை 3 ஆண்டுகளாக போட்டுக்கிட்டு பள்ளிக்கு போகும் தன் பிள்ளைகளுக்கு ஒரு சீருடை வாங்கித் தந்திட வேண்டும் என்ற ஆசையோ!

இந்த விரல்களின் துரிதத்திற்கு காரணம் தெரியவில்லை. ஆனால், ஒன்று மட்டும் புரிந்தது. விரல்களுக்கிடையே கோர்க்கப்பட்டிருக்கும் இந்த மல்லிகை மொட்டுக்கள் விற்கப்படமால் மலர்ந்திருக்கும்போது இவள் நிச்சயம் மடிந்திருப்பாள்.
“அக்கா! எனக்கு ஐந்து முழம்  மல்லிகை சரம் கொடுங்கள்”. யாரோ பெண் ஒருவர்  பூ வாங்கும் காட்சி கண்டு நிம்மதி பெருமூச்சுடன் பயணத்தை தொடர்ந்தேன்.
 

Celebrate the failures, தோல்வியை கொண்டாடுவோம்

தோல்வியை கொண்டாடுவோம்

        வெற்றிப் பெற்ற மனிதர்களையே தூக்கிவைத்துக் கொண்டு ஆடும் சமூகம் இது. தோல்வி கண்ட மனிதர்களை மனிதர்கள் நிலையிலிருந்து அன்னியப்படுத்தி இச்சமூகத்தில் வாழ தகுதியற்றவர்கள் என்றுக் கருதும் ஊனச்சமூகத்தில் ஊமையாய் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றோம் நாம். வெற்றி போன்று தோல்வியும் ஒரு நிரந்திர நிலையன்று என்பதை நாம் மறந்துப்போய் விட்டோம்.

மேல்நிலைத் தேர்வில் மாநிலத்தில், மாவட்டத்தில், பள்;ளியில் முதல் மதிப்பெண் பெறுகின்ற மாணவ மாணவர்களே மனித அறிவின் ஆளுனர்கள் என்று போற்றப்படுகின்றனர். மனனம் செய்து ஒப்புவிக்கும் மனநிலையே இன்று அறிவாற்றல் என்று போற்றப்படுகின்றதேயன்றி மற்றத் திறமைகள், படைப்பாற்றல்கள் எல்லாம் அறிவாற்றல்கள் என்று பார்க்கப்படாததே மனிதக்குல வளர்ச்சியின் தடைக்கற்கள். இதனாலயே மாற்றுத்திறன் வாய்ந்தவர்கள், படைப்பற்றல் கொண்டவர்கள், இன்னும் வேறு பல திறமைகள் கொண்டவர்கள் வாழவே தகுதியற்றவர்கள் என்று கருதப்படுவதனாலேயே மாணவ மாணவிகளுக்கிடையே தற்கொலை எண்ணம் அதிகரிக்கின்றது, தற்கொலையும் செய்துக் கொள்கின்றனர்.

இன்றைய சமூகத்தில் வெற்றி கொண்டாடப்;படுவதுப் போன்று தோல்வியும் கொண்டாடப்படவேண்டியது. தோல்வி மனிதனுக்கு ஒவ்வாத ஒன்றல்ல மாறாக மனித ஆளுமையை வளர்த்தெடுப்பது. தோல்வியே மனிதனின் வளர்சியற்ற பகுதிகளை பகுப்பாய்வுச்செய்து பண்படையச்செய்யும். தோல்வியே மனிதனை அவரவர் தகுதிகளுக்கேற்ப புரிந்துக்கொள்ளும். தோல்வி கண்டவர்களே வளர்ச்சியடைகின்றனர், வளரச்செய்கின்றனர். வாழ்க்கையில் தோல்வி பெறாத மனிதர்கள் மகாத்மாக்களாக, சாதனையாளர்களாக வாழ்ந்ததில்லை.

தோல்வியடைந்துவிட்டீர்களா ! கவலை வேண்டாம். மகாத்மாக்களாக வாழ தோல்வியை கொண்டாட பழகிக்கொள்ளுங்கள். வாழ்க்கை உங்களை கொண்டாடும் நேரம் வெகு தொலைவில் இல்லை.