அரசியல், குறும்படம், பாடல், விமர்சனம், கதை, அன்பு, எதிர்நோக்கு, வாழ்க்கை, விழிப்புணர்வு, நம்பிக்கை, மகிழ்ச்சி.....

Search This Blog

Responsibility, பொறுப்பு

பொறுப்பு

 
          உலகப் பாவங்களில் எல்லாம் மிகப்பெரிய கொடும் பாவம் பொறுப்பேற்காத தன்மை. பொறுப்பேற்காமை என்பது நம்முடைய மொழி, பழக்கவழக்க கலாச்சாரங்களில் நியாயப்படுத்தப்படுகின்ற ஒன்றாக திகழ்கின்றது. நாம் முள்ளை மிதித்தாலும் காலில் முள்ளேற்றிக்; கொண்டாலும், முள் குத்திவிட்டது என்று முள்ளின் மீதுதான் பழியை சுமத்துகின்றோம். நாம் பொறுப்பேற்பதில்லை.

எதாவது நம்மால் கீழே விழுந்து உடைந்துப்போனால், நான்தான் உடைத்தேன் என்று பொறுப்பேற்பதில்லை. கீழே விழுந்து உடைந்துவிட்டது என்றுதான் கூறுகின்றோம்.
சிறிய சிறிய நிகழ்வுகளில் தொடங்கி இயல்பாகிப் போன இந்த பொறுப்பற்ற மனநிலை இதரச் சமூக சூழல்களிலும் பிரதிபலிப்பதை நாம் உணர்கின்றோம்.
உலகின் நிகழ்வுகளுக்கு நாமும் ஒரு விதத்தில் பொறுப்பாளியாகின்றோம்.

தனக்கு பொறுப்பு இல்லை என்று ஒருவன் சொல்வானெனில் அவன் பாவம் செய்கின்றான