அரசியல், குறும்படம், பாடல், விமர்சனம், கதை, அன்பு, எதிர்நோக்கு, வாழ்க்கை, விழிப்புணர்வு, நம்பிக்கை, மகிழ்ச்சி.....

Search This Blog

மௌனத்தின் ஓசை, Song of silence


மௌனத்தின் ஓசை 

ஒரு காலைப் பொழுது பேருந்து நிறுத்தத்தில் நின்றுக்கொண்டிருந்தேன். வாகன சத்தங்கள் மௌனத்தை குலைத்துக்கொண்டிருந்தன. கடையோரச் சந்தையின் மக்கள்; சத்தங்களும், மாணவ மாணவிகளின் ஒலி சத்தங்களும், சாலை பராமரிப்பு பணியாளர்களின் பணி சத்தங்களும் என் வார்த்தைகளே எனக்கு கேட்கமுடியாத தருணத்தில் இரண்டு மாணவர்களின் மௌன மொழிகள் என் கவனத்தை ஈர்த்தன. பல்வேறு இறைச்சல் சத்தங்களுக்கு மத்தியில் வாய் பேச முடியாத இவர்களின் கை, கண் செய்கைகள் என் மனதினுள் பேரோலியாக பதிந்தன.
            
            அன்று தான் நான் புரிந்துக்கொண்டேன் மௌனத்தின் ஓசை ஓங்கி ஒலிக்கும் என்று. இறச்சலின் சலசலப்புக்குள் சென்று தேடிப்பாருங்கள் உங்களுக்காய் சில மௌனங்கள் உங்களை மௌனியாக்க காத்துக்கிடக்கின்றன.