அரசியல், குறும்படம், பாடல், விமர்சனம், கதை, அன்பு, எதிர்நோக்கு, வாழ்க்கை, விழிப்புணர்வு, நம்பிக்கை, மகிழ்ச்சி.....

Search This Blog

தீவிரவாதத்திற்கு எதிரான தீவிரவாதம்

தீவிரவாதத்திற்கு எதிரான தீவிரவாதம்

அமெரிக்கா ராணுவத்தினால் தேடப்பட்ட, தீவிரவாதி என்று முத்திரையிடப்பட்ட ஓசாமா 02.05.2011 அன்று பாக்கிஸ்தானில் வைத்துக் அமெரிக்க ராணுவத்தினால் கொல்லப்பட்டார். செய்தி அறிந்த அனைவரும் மகிழ்சியில் அக்களித்தனர்.

யார் இந்த ஒசாமா? சவுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் முகமது பின் அவாத் பின்லேடனுக்கு 17 வது மகனாக 1957ம் ஆண்டு ஓசாமா பின் லேடன் பிறந்தார். ஓசாமாவனி; தந்தைக்கு 54 குழந்தைகள் இருந்த போதிலும் செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வாந்தார். பின் லேடன் ஜெட்டாஹ்கிங் அப்துல்லா அஜிஸ் பல்கலைக்கழகத்தில் மேலாண்மை மற்றும் பொருளாதாரம் படித்தவர்.

இத்தகைய மனிதர் அமெரிக்காவால் தான் உருவாக்கப்படுகின்றார். அப்கானிஸ்தானில் ரஸ்ய படைகளை விரட்டியடிக்க அமெரிக்கா ஒசாமாவிற்கும் அவனுடைய கூட்டாளிக்கும் நவீன ஆயுதங்களையும் போர் பயிற்சியினையும் வழங்கி அவர்களை ரஸ்ய படைக்கு எதிராக இயக்கிவிடுகின்றது அமெரிக்கா.

அமெரிக்காவின் நிழலிலும் பணத்திலும் செழித்து வளருகின்ற பின்லேடன் இயக்கம் ஒருகட்டத்தில் அமெக்காவிற்கு எதிராக திரும்பியதன் விளைவாக அமெரிக்க இரட்டை கோபுரம் விமான தாக்குதலினால் தரைமட்டமாக்கப்படுகின்றது. இதனால் அமெரிக்காவின் முதல் எதிரியாக மாறுகின்றார் ஒசாமா.

இந்த 10 ஆண்டுகளில் ஒசாமை பிடிக்கப்போகின்றோம் என்ற பெயரில் அமெரிக்க அரசி செலவ செய்தது 58.5 லட்சம் கோடி ருபாய். இதற்காக 6000 அமெரிக்க வீரர்கள் தங்களையே பலிக்கொடுத்திருக்கின்றனர். ஏறக்குறைய 12 லட்சம் அப்பாவி பொது மக்கள் தேடுதலின் போது கொலை செய்யப்பட்டிருக்கின்றனர். இது ஒசாமா கொன்ற மக்களை விட அதிகம் ஆகும்.
ஒருமனிதனை தீவிரவாதியாக உருவாக்கிவிட்ட குற்றத்திற்காக மட்டுமல்லாமல் இத்தனை அப்பாவி மக்களை பலி வாங்கிய அமெரிக்காவை தீவிரவாதிகள் பட்டியலில் சேர்ப்பது யார்?

தீவிரவாத்திற்கு எதிரான தீவிரவாதம் நீதியானதா? தீவிரவாதத்திற்கு எதிரான முழக்கம் என்றால் அது அமெரிக்காவிற்கு எதிரான முழக்கமாக தான் இருக்க முடியும்.