உயிர்

அருணாவை கருணை கொலை செய்ய நீதிமன்றம் தீர்ப்பிட வேண்டும் என்று பிரபல பெண் எழுத்தாளர் பிங்கி விராணி மனுதாக்கல் செய்திருந்தார். அருணா தாவர நிலையிலேயே இருக்கின்றாள் என்பது இவரது வாதம். இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுப்படி செய்து உயிரின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தியது.
உயிர் என்பது உலக அதிசயம், கடவுளின் இருத்தலை ஆழமாக மெய்பிக்கும் அர்ப்புதம். உலக உயிரிகளை எல்லாம் ஒரே சங்கிலியில், சமநீதி சக்கரத்தில் இணைத்து வாழ்வளிக்கும் உத்திரவாதம்.

கருணை என்பது மனிதனின் பல பண்பான குணங்களில் ஒன்று. கருணை அன்பிலிருந்து ஊற்றெடுக்கின்றது. கருணை கொல்லாது மாறாக வாழ்விக்கும் ஆற்றல் கொண்டது. இன்று கருணை போன்ற வார்த்தைகளின் உள்ளர்த்தம் திரிக்கப்படுகின்றது. கருணை கொலையும் செய்யும் என்று மெய்பிக்கப்படுகின்றது.
கருணை என்பதே கிழங்கு வகைகளில் ஒன்று என்றாகி விட்டது என்ற அர்த்தத்தில் கிண்டலடிப்பார் புதுமை பித்தன்.
கருணையின் உண்மை பொருள் அறிவோம் ! உயிர்க்கு உத்திரவாதம் தருவோம் !