ஊனக் கண்ணிலிருந்து விடுபடு!
முக்கோணத்தினுள் இருக்கும் வார்த்தைகளை வாசித்து விரைவாகச் சொல்லவும்.
பலரும் "Paris in the Spring" என்று தான் சொல்வார்கள். மனிதர்களின் மூளை எப்போதுமே அவசரத்தில் செயல்படும்போது தவறு இழைக்கின்றது. நாம் ஒவ்வொரு வார்த்தையாக பகுத்து வாசித்திருந்தோமானால் தவறை தவிர்த்திருப்போம். ஆனால் அவசரத்தில் எல்லா வார்த்தைகளையும் தொகுத்துப் பார்க்கும் போது நம் மூளை பிழை ஏற்படுத்துகின்றது. நாம் நம்மைப் பற்றி அறிந்து வைத்திருக்கும் பல உண்மைகளும் பிறர் நம்மைப் பற்றி பகுத்து சொல்லியனவே ஆகும். எடுத்துக்காட்டாக 'உனக்குப் பேசத் தெரியாது', ' நீ ஒரு முட்டாள்,' ' உன்னால் சாதிக்க முடியாது', நீ ஒன்றுக்கும் உதவாதவன்'. நாமும் இவற்றையே உண்மை என்று நம்பி நம் ஆழ் மனதில் பதியச்செய்கின்றோம். இத்தகைய எதிர்மறை எண்ணங்களே நம் ஆளுமையை வெகுவாகப் பாதிக்கின்றன. இதனையே நாமும் நம்பி ஏற்றுக்கொள்கின்றோம். நம் மூளை நம்மைப் பற்றி தவறாக, எதிர்மறையாகப் பதியவைத்திருக்கும் எண்ணங்களைக் கட்டவிழ்ப்பு செய்வோம். நம் உண்மைத் தன்மையைக் கண்டுணர்வோம்.