கூடன்குளம் அணுஉலைக்கு எதிராக போராடிய மக்களை தடியடிநடத்தி கலைத்த அரசின் பாசிச போக்கை வன்மையாக கண்டிப்போம்.
மக்களின் குரலுக்கு ஓராண்டு காலமாக செவிச்சாய்காமல் செவிடராய் இருந்த அரசு இன்று குருடாகவும் மாறியிருப்பது ஏன்?
மக்களுக்கான, மக்களுக்காக என்ற பெயரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்டுகின்ற அரசுகள் மக்களுக்கு எதிராக செயல்படுவது மக்கள் விரோத போக்கை காட்டுகின்றது.
பல ஆயிரம் கோடி ஊழல் செய்கின்ற அரசு, ஊழல்வாதிகளை பாதுகாக்கின்ற அரசு எப்படி மக்கள் சார்பாக செயல்பட முடியும்?
மக்களின் உணர்வுகள் மதிக்கப்படாமல் மக்களின் மேல் அதிகார வர்க்கம் நிகழ்த்திய தடியடி மக்கள் விரோதப்போக்கு அரசினை தோலுரித்துக்காட்டுகின்றன. இத்தகைய போக்குக்காக இத்தகைய அரசுகள் பழிவாங்கப்படுவது உறுதி.
மக்களின் நன்மைக்காக மக்களின் விடுதலைக்காக உதவாத அரசு எப்படி மக்கள் அரசாக இருக்க முடியும்?
இன்னும் எத்தனை காலம் ஏமாற்றுவீர் இந்த நாட்டிலே?