அரசியல், குறும்படம், பாடல், விமர்சனம், கதை, அன்பு, எதிர்நோக்கு, வாழ்க்கை, விழிப்புணர்வு, நம்பிக்கை, மகிழ்ச்சி.....

Search This Blog

Live by all means, வாழ்ந்துவிடு

வாழ்ந்துவிடு


உயிருள்ள மனிதர்கள் எல்லோரும் வாழ்கின்றார்கள் என்று சொல்லிவிட முடியாது.

இந்திய நாட்டின் மக்கள் தொகை 110 கோடி என்றால் இதில் 50 சதவிகிதம் பேர் ஏதோ இருக்கின்றார்கள். 30 சதவிகிதம் பேர் இயங்குகிறார்கள். மற்றைய 20 சதவிகிதம் பேர் மட்டுமே வாழ்கி;ன்றவர்களாக இருக்கின்றனர்.

இருப்பது என்பது, வெறும் உயிர் வாழ்தல் இலட்சியமில்லாமல் (விலங்குகள்போல்) வாழ்வை அலட்சியப்படுத்துவது

இயங்குவது என்பது வேறு ஒருவர் சொல்லி, கட்டாயப்படுத்தி நாம் சில செயல்கள் செய்வது, இயந்திரங்கள் போல்.

வெற்றி என்பது வாழ்க்கை அல்ல, வெற்றிக்காக போராடுவது, இலட்சியத்தோடு காலத்தை வெல்வது தான் வாழ்க்கை.

இலட்சியம் வாழ்க்கையன்று வாழ்வில் ஏற்படுத்திக்கொண்ட காயங்கள் தான் வாழ்க்கை.

வாழ்பவன் பிறர் வாழ வழி செய்வான். வாழ்பவன் பிறருக்கு வழி ஆவான். வாழ்பவன் பிறர் வாழ வழிவிடுவான். எனவே நீயும் வாழ்ந்துவிடு