அரசியல், குறும்படம், பாடல், விமர்சனம், கதை, அன்பு, எதிர்நோக்கு, வாழ்க்கை, விழிப்புணர்வு, நம்பிக்கை, மகிழ்ச்சி.....

Search This Blog

The Winner, வெற்றியாளன்

வெற்றியாளன்


உலகிலே வெற்றி பெற்றவர்கள் பலரென்றால் அதில் ஒரு சிலருக்கு மட்டுமே வெற்றியின் மகுடம் சூட்டப்படுகின்றது.

நேர்மையோடு உழைப்பினால் வென்றவர்கள் உதாசினப்படுத்தப்பட்டு குறுக்குவழியில் உழைக்காமல் வென்றவர்கள் உயர்த்திக் காட்டப்படுகின்றனர்.

ஒரு சிலர் தானாகவே வெற்றிக் கனியை பெறுகின்றார்கள். வேறு சிலரின் மேல் வெற்றி பலவந்தமாக திணிக்கப்படுகின்றது. மற்ற சிலர் விலை கொடுத்து வெற்றியை வாங்கிக் கொள்கின்றனர்.

பாரத ரத்னா என்பது இந்திய அரசால் ஒரு காலத்தில் வெற்றியாளர்களுக்கு கொடுக்கப்படும் உயரிய விருது. ஆனால் இன்று கட்சி சாயம் பூசப்பட்டு, விலை கொடுத்து வாங்கக்கூடிய பஞ்சுமிட்டாய் கதையாகிப் போனது.

உலகிலேயே உயரிய விருதான அமைதிக்கான நோபல் பரிசு. அகிம்சையின் தந்தை என்று சொல்லக்கூடிய காந்திக்கு கொடுக்கப்படவில்லை என்பதுதான் வேடிக்கையான உண்மை.

திரைப்பட நடிகர்களையும் மட்டைப்பந்து ஆட்டக்காரர்களையும் டாட்டா, அம்பானிகளையும் வெற்றியாளர்களாக காட்டும் இவ்வுலகம் எண்ணற்ற பாமர மனிதர்களின் வெற்றியினையும் பிறரை வெற்றியாளனாக உருவாக்கிய சராசரிகளை இருட்டடிப்பு செய்கிறது.

உண்மை வெற்றியாளன் வெற்றி பெறுபவன் அல்ல வெற்றி பெறச் செய்பவன். எனவே வெற்றி பெறுவது அல்ல. கொடுப்பதில் தான் இருக்கி;ன்றது வெற்றியாளனின் வெற்றி. வெற்றி பெறுவது இலக்கு அன்று. வெற்றி பெறச் செய்வதுதான் சிறந்த இலக்கு.