அரசியல், குறும்படம், பாடல், விமர்சனம், கதை, அன்பு, எதிர்நோக்கு, வாழ்க்கை, விழிப்புணர்வு, நம்பிக்கை, மகிழ்ச்சி.....

Search This Blog

Perspectives, பார்வைகள் பலவிதம்

பார்வைகள் பலவிதம்



'பார்வை தெரியும்போது பாதை தெளிகிறது. புது பயணம் தொடர்கிறது'.



வாழ்வின் வெற்றியும், தோல்வியும், மகிழ்ச்சியும் விரக்தியும் பார்க்கின்ற பார்வையில்தான் அடங்கியிருக்கி;னறது.



ஒரு குவளையில் பாதி அளவு தண்ணீர் இருக்கி;ன்றது. தாகத்தில் ஓடி வருகின்ற மனிதன், 'ச்ச... என்ன இது, தாகத்தில் ஓடி வந்தேன். பாதி அளவு தண்ணீர்தானே இருக்கின்றது', என்று சலித்துக் கொள்கின்றான். இதனை குறைப்பபார்வை எனலாம் (Pessimistic view). இந்த ரோஜா செடியில் இவ்வளவு முட்களா என்று புலம்புகிற மனநிலை இது.



அதே பாதி அளவு தண்ணீர் இருக்கி;ன்றது. அதே போல் தாகத்தில் ஓடிவரும் ஒரு மனிதன் 'ஆ...ஹா... நம்ம ஓடி வந்தது வீண் போகல. பாதி அளவு தண்ணீராவது இருக்கிறதே', என்று கூறி மகிழ்ச்சியில் பருகுகின்றான். இதனை நிறைப்பார்வை எனலாம் (Optomistic view). 'இந்த முட்செடியில் கூட இவ்வளவு அழகான ரோஜா பூக்களா'இ என்று பெருமிதம் கொள்கின்ற மனநிலை இது.



அதே பாதி அளவு தண்ணீர் களைப்பில் ஓடி வரும் வேறு ஒரு மனிதன், 'ஏன் இந்த குவளையில் பாதி தண்ணீர்தான் இருக்கி;ன்றது' என்று கேள்வி எழுப்புகின்றான். இதனை விமர்சனப் பார்வை எனலாம் (Critics’ view). ரோஜா செடியில் முட்கள் எதற்கு? என்கிற மனநிலை.



குறைப்பார்வை கொண்ட மனிதர்களுக்கு வண்ணப் புகைப்படம்கூட கருப்பு வெள்ளையில்தான் தெரியும். தன் மதிப்பீடுகள், திறமைகள் அனைத்தையும் குழி தோண்டி புதைத்துவிட்டு குறைப்பட்டுக் கொண்டே இருப்பவர்கள். நிறைப்பார்வை கொண்ட மனிதர்கள், வறுமையிலும் வளமையிலும் வாழப் பழகிக் கொண்டவர்கள் கருப்பு வெள்ளை புகைப்படத்தைக் கூட வண்ணப்படம் என்பார்கள்.



விமர்சனப் பார்வைக் கொண்ட மனிதர்கள், கன்னத்தில் ஒருவன் அடித்தால், என்னை ஏன் அடித்தாய் என கேட்பார்கள். வெளித்தோற்றத்தைக் கண்டு ஏமாறாமல் மெய்பொருள் ஆய்ந்து அறிபவர்கள்.



இத்தகைய பார்வைகளில்,



உண்;மை பார்வை உனக்கு தெரியும்போது பாதை தெளிகின்றது. புது பயணம் தொடர்கின்றது.