அரசியல், குறும்படம், பாடல், விமர்சனம், கதை, அன்பு, எதிர்நோக்கு, வாழ்க்கை, விழிப்புணர்வு, நம்பிக்கை, மகிழ்ச்சி.....

Search This Blog

வலை விபத்துக்கள் , Internet Beware

வலை விபத்துக்கள்

    இணையத்தின் ஆக்கப்பூர்வமான பயன்பாடுகள் பல இருப்பினும் இளைஞர்களை வழி தவறச் செய்யும் யுக்தியும் இணையத்திற்கு அதிகமாகவே உண்டு. இன்று அதிகமாக இணையத்தினை பயன்படுத்துபவர்கள் இளையோரே. இணையத்தற்கு முன்பாக முற்றிலும் சரணாகதியாகி, அடிமையாகி அல்லலுருகின்ற இளையோரின் கதைகள் பல உண்டு. இளைஞர்களை வலையில் விழவைக்கும் விபத்துக்கள் சிலவற்கை இங்கே காண்பேம்.

1.  Hackers: தொழில்நுட்ப முறைகேடு விளைவித்து உங்கள் வலைத்தள முகவரியை, குறியீட்டு எண்ணை வழிமறித்து அதனை தவறான காரியங்களுக்கு பயன்படுத்தும் போது உங்கள் பெயரில் தீமைகள் அரங்கேர வாய்ப்பு உண்டு.

2.    Scammers: உலக மோசடி ஆசாமிகள் வலைத்தளங்களில் உலாவருகின்றனர். உங்களுக்கு லாட்டரி அடித்துவிட்டது. நீங்கள் ஒரே நாளில் கோடீஸ்வரர்களாக போகின்றீர்கள். பணத்தை பெற்றுக்;கொள்வதற்கு முன்பணமாக 1 லட்சம் கொடுத்தால் போதும் என்று கூறி மோசடியில் ஈடுப்படும் ஆசாமிகளை கண்டு இளையோர் கவனமாக இருக்க வேண்டும்.

3.    Spammers: சில மின்னஞ்சல்கள் உங்கள் கணிணியினை பாதிக்கக்கூடியதாக இருக்குக். விளம்பரங்களாகவோ, வைரசுகளாகவோ, வீண் சந்தை வியாபாரங்களாகவோ, எரிச்சலை தரக்கூடியதாகவோ இருக்கும். இதற்கு இளைஞர்கள் முக்கியத்துவம் கொடுக்கக கூடாது.

4.   Pornography: இளைஞர்கள் பலரை பலியாக்கி அவர்களின் பாலியல் உணர்வுகளை மிகைப்படுத்தி அவர்களை சீர்கெட தூண்டுவதும், தவறான பாலியல் கருத்துக்களை, காட்சிகளை விதைப்பதும் இணையத்தின் வலை விளையாடல்களே. இளைஞர்கள் இத்தயை கணிணியின் கண்ணியிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

5.    Cyber Bullying: தன்கட்டுப்பாட்டில் ஒருவர் இருக்கவேண்டும் என்பதற்காக அந்த நபருக்கு தொடர்ந்து மிரட்டல் கடிதங்களும், கொச்சை உரையாடல்களும் நடத்தி இளையோரின் மனதை காயப்படுத்தி அவர்களை தற்கொலை செய்துக்கொள்ள கூட தூண்டும் மனிதர்கள் வலை தளங்களில் உண்டு. இவர்களின் வலைகளில் இளையோர் விழுந்து விடக்கூடாது.

6.   Cyber-Persona: நண்பர்களோடும் குடும்பத்தினரோடும் நல்ல உறவு இல்லாத இளைஞர்கள் மிக எளிதாக வலை விபத்துக்களில் சிக்கி விடுகின்றனர். இத்தகைய இளையோரை கொக்கிப்போட்டு பிடிக்கவே பல வலைத்தளங்கள் உண்டு. ஊர், பெயர், முகவரி தெரியாத மனிதர்களோடு உறவுக் கொண்டு நாள் முழுவதும் அவர்களோடு தொடர்பில் இருக்க இளைஞர்கள் விரும்புகின்றனர். இதனால் தங்கள் நேரத்தையும் தங்கள் வாழ்க்கையையும் விரயம் செய்யும் அபாயம் உண்டு.

இந்தியாவில் ஏறக்குறைய 45 கோடி இளைஞர்கள் உள்ளனர். இதில் சராசரி 15 கோடி இளைஞர்கள் இணையத்தினை பயன்படுத்துபவர்களாக இருக்கின்றனர். இச்சூழலில் இணையத்தின் ஆழத்தினையும அதன் ஆபத்தினையும்;, அகலத்தினையும் அதன் அபாயத்தினையும்,இளைஞர்கள் உணர்ந்திருப்பது நல்லது.