எச்சரிக்கையாய் இருப்போம்.
மதவாத பயங்கரவாதத்தை தவிர்ப்போம்.ஒட்டுமொத்த தமிழகமே தேர்தல் தவறு இழைத்துவிடுமோ என்று ஐயம் எழுகின்றது.
தேர்தலில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களை எதிர்த்து அதே கட்சியில் உள்ளவர்களே போட்டி வேட்பாளர்களாக களம் இறங்கியிருப்பது கட்சியின் பலத்தை குறைக்கின்றது. கட்சி அரசியலின் உண்மை தன்மையை அவர்கள் விசுவாசத்தை தோலுரித்துக் காட்டுகின்றது.
மதச்சார்பற்ற கட்சிகளின் ஓட்டு பிரிவதன் மூலமாக மதச்சார்பு கட்சிகளும், தீவிரவாத சமய பயங்கரவாதிகளும் தேர்தலில் வெற்றிப்பெறும் அபாயம் இருக்கின்றது. எனவே நம் நிலைப்பாட்டில் ஒற்றுமை தேவை.
எச்சரிக்கையாய் இருப்போம். சுய லாபம் பார்க்கும் வேட்பாளர்களை புறக்கணிப்போம்.
ஒன்று சேர்ந்து நம் ஓட்டுகள் சிதராமல் சிந்தாமல் மதச்சார்பற்ற கட்சி வேட்பாளர்களுக்கு நம் ஆதரவை கொடுப்போம்.
மதவாத பயங்கரவாதத்தை தவிர்ப்போம்.