கிரிக்கெட் என்னும் அரசியல் விளையாட்டு
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. மக்கள் மனங்களிலும் எண்ணங்களிலும் கிரிக்கெட் போட்டியின் நினைவுகளே மேலோங்கியிருக்கின்றது.
பாராளுமன்றத்தை முடக்கிப்போட்ட தெலுங்கானா பிரச்சினை மக்களின் எண்ணங்களில் வருவதில்லை.
வரவிருக்கின்ற மாநிலங்களவை தேர்தல் அதன் முக்கியத்துவம் மக்கள் எண்ணங்களில் வருவதில்லை.
நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஸ்பெக்ட்ரம் மற்றும் ராசா பற்றிய செய்திகள் முக்கியத்துவம் பெறுவதில்லை.
ஆதர்ஸ் குடியிருப்பு முறைகேடுகள் பற்றிய செய்திகள் அதிகம் பேசப்படவில்லை.
வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கின்ற கருப்பு பணம் பற்றிய பேச்சு இல்லை.
உலகத்தையே புரட்டிப்போட்டுக்கொண்டிருக்கின்ற எகிப்து மற்றும் லிபியா புரட்சி பற்றிய செய்திகளுக்கு நம்மவர்கள் முக்கியத்துவம் தருவதில்லை.
காரணம்...
உலக கோப்பை கிரிக்கெட்..
விடையாட்டு வீரர்கள் நன்றாக விளையாடுகின்றார்களோ என்னவோ அரசியல் உலககோப்பை போட்டிகளில் நன்றாகவே விளையாடுகின்றது.