அரசியல், குறும்படம், பாடல், விமர்சனம், கதை, அன்பு, எதிர்நோக்கு, வாழ்க்கை, விழிப்புணர்வு, நம்பிக்கை, மகிழ்ச்சி.....

Search This Blog

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே! Corruption can Never be Compromised

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே!
 

முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ராசாவின் 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை அடுத்து அவர் கைது செய்த நிகழ்ச்சி பலருக்கு மகிழ்ச்சியாகவும் வேறு பலருக்கு வீழ்ச்சியாகவும் இருக்கின்றது.

ராசாவின் கைதை கொண்டாடியவர்கள் சிலர் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்.  வேறு சிலர் ராசாவின் கைதுக்கு பேரூந்துகளை கொளுத்தியும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டும் துக்கம் அனுசரித்தார்கள்.

செல்வி. ஜெயலலிதா அவர்களுக்கு ஊழல் வழக்கில் தண்டனை கொடுக்கப்பட்டப் போது மாணர்களின் பேரூந்து ஒன்று எரிக்கப்பட்டதும் அதற்கு பல மாணவிகள் பலியானதும் நாம் அறிந்ததே.

கர்னடாகாவில் எடியூரப்பாவின் மேல் கூறப்பட்ட ஊழல் குற்றங்களின் மேல் விசாரணை நடத்தலாம் என்று கூறிய ஆளுனருக்கு எதிராக போராட்டம் நடத்த முன்வருபவர்களை என்னவென்று சொல்ல. உறவுக்கு துணை போகலாம் ஊழலுக்கு துணை போகலாமா.

ராசா தலித் என்பதற்காக அவர் செய்த குற்றங்களை நியாயப்படுத்த முடியாது. விடுதலை சிறுத்தைகளின் ராசாவுக்கான ஆதரவு போராட்டங்கள் விடுதலை சிறுத்தைகளின் கொள்கையற்ற போக்கினை பளிச்சிடுகின்றன.

ஊழல் குற்றச்சாட்டிலிருந்து ராசாவை பாதுகாக்க அவருக்காக வாதாடிய, அல்லும் பகலும் போராடிய கட்சிகள் இன்று விழி பிதுங்கி நிற்கின்றன.

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே....

ராமனானாலும் ராவணனாலும் குற்றமெனில் அவன் தண்டனைக்கு உரியவனே...