அரசியல், குறும்படம், பாடல், விமர்சனம், கதை, அன்பு, எதிர்நோக்கு, வாழ்க்கை, விழிப்புணர்வு, நம்பிக்கை, மகிழ்ச்சி.....

Search This Blog

அன்புச் செய்கின்றாயா அதை செயலில் காட்டு...Love and my children

அன்புச் செய்கின்றாயா அதை செயலில் காட்டு...

 குடித்துவிட்டு ஆட்டம் போடும் தங்கள் தந்தையின் கொடுமையை தட்டிக்கேட்கும் விதமாக இரண்டு குழந்தைகள் நாகர்கோவில் எஸ்.பி யிடம் மனு ஒன்றை கொடுத்திருக்கும் செய்தி பரப்பரப்பை ஏற்படுத்திருக்கின்றது  (தினகரன் 11.01.2011).

குழந்தைகள் இன்று முதிர்ச்சி அடைந்திருக்கின்றார்கள். அவர்களின் உரிமைகளையும் கடமைகளையும் இளம்வயதிலிருந்தே தெரிந்து வைத்திருக்கின்றார்கள். 

குழந்தைகளுக்கு முன்மாதிரியாக இருந்து நல்வழிக்காட்ட வேண்டிய பெற்றோர்களின் வாழ்வும் வார்த்தையும் குழந்தைகளை எளிதில் பாதித்து விடுகின்றன.

பள்ளிச்சென்று  கற்றுக்கொள்வதை விட வீட்டின் சூழல்கள் தான் குழந்தைகளின் வளர்ச்சிக்கும் முதிர்ச்சிக்கும் வாய்காலாக அமைகின்றன.

குடித்து விட்டு ஆட்டம் போடும் ஒரு தந்தை தன் மகனை அல்லது மகளை அன்புச்செய்கின்றார் என்று ஒருபோதும் சொல்ல முடியாது.

உன் குழந்தையை, பெற்றோரை அன்புச்செய்கின்றாயா அதை செயலில் காட்டு...

செயலில் காட்டப்படாத அன்பு உண்மையான அன்பு என்று புரிந்துக் கொள்ளப்படமாட்டாது.