எந்த நாடு அடிமைப்பட்டு கிடக்கின்றதோ அது என் தாய் நாடு
எகிப்திய பிரச்சினை என்று பார்ப்பதை விட எகிப்திய புரட்சி என்று பார்ப்பது தான் சிறந்ததாகும். 1789 ஆம் ஆண்டு நடந்த பிரஞ்சு புரட்சிக்கு பிறகு இத்தகைய பெரிய புரட்சிகள் 21 ஆம்; நூற்றாண்டு; நாகரிக உலகில் சாத்தியம் இல்லை என்று சொன்ன வரலாறு இன்று எகிப்திய புரட்சியின் ழூலமாக புரட்சிக்கு புதிய அர்த்தத்தை தருகின்றது.
சர்வாதிகாரி முபாரக் அரசின் அதிகார அரசியல் ஆயுள் முடிவதற்கு பெரும் பங்காற்றிய பெருமை எகிப்திய சமானிய மக்களையே சாரும். ஆயுதம் தாங்கி தான் புரட்சி செய்ய முடியும் என்ற எண்ணத்தை புரட்டி போட்டு விட்டது எகிப்திய புரட்சி. அடித்தட்டு மக்களின் எழுச்சியே இன்று புரட்சியாக வெடித்துள்ளது.
இந்திய மண்ணிலும் சர்வாதிகாரத்தால் அடக்கி ஆழும் அரசுகளுக்கு எகிப்திய புரட்சி ஒரு எச்சரிக்கை மணியாக இருக்கட்டும்.