சமயம் என்னும் சகதியில்...
சமயம் என்றால் சமைத்தல் அல்லது பண்படுத்துதல் என்பது பொருள். மனிதனை பண்படுத்தி புது மனிதனாக பக்குவப்படுத்துவதே சமயத்தின் நோக்கம் ஆகும்.
மனிதனை நெறிப்படுத்தாது மனிதனை மடையனாகவும் மத வெறியனாகவும் மாற்றும் சமயம் சமயம் ஆகாது.
இன்று சமயத்தின் பெயரால் பண்படுத்துதலைவிட புண்படுத்துதலே அதிகளவில் அரங்கேறுகின்றன.
கலவரங்களும், கொலைகளும், கோயில் இடிப்புகளும், கலாச்சார சீரழிவுகளும் சமயத்தின் பேயராலேயே நிகழ்கின்றன.
இச்சூழலில் சமயம் என்னும் சகதியில் உழல்வதை விட சமயத்தினை மறு வாசிப்பு செய்து அதனையே விடுதலையின் ஆயிதமாக்கிட வேண்டும்.
நம் கடவுள் ஆதிக்கபோக்கின் கடவுள் அல்ல விடுதலையின் கடவுள்.
நம் கடவுள் வன்முறையின் கடவுள் அல்ல வாழ்வுமுறையின் கடவுள்.
நம் கடவுள் அடிமைதனத்தின் கடவுள் அல்ல ஏழைகளின் கடவுள்.
நம் கடவுள் வன்முறையின் கடவுள் அல்ல வாழ்வுமுறையின் கடவுள்.
நம் கடவுள் அடிமைதனத்தின் கடவுள் அல்ல ஏழைகளின் கடவுள்.
சமயம் நம்மை விடுவிக்கட்டும் நம்மை அடிமையாக்க வேண்டாம்.
சமயம் நம்மை தூண்டியெழுப்பட்டும் நம்மை தூங்கச்செய்ய வேண்டும்.
சமயம் நம்மை சமைக்கட்டும் நம்மை சகதியாக்க வேண்டாம்.
சமயம் நம்மை தூண்டியெழுப்பட்டும் நம்மை தூங்கச்செய்ய வேண்டும்.
சமயம் நம்மை சமைக்கட்டும் நம்மை சகதியாக்க வேண்டாம்.