அரசியல், குறும்படம், பாடல், விமர்சனம், கதை, அன்பு, எதிர்நோக்கு, வாழ்க்கை, விழிப்புணர்வு, நம்பிக்கை, மகிழ்ச்சி.....

Search This Blog

உணர்வுகளும் நானும், Feelings and Me


உணர்வுகளும் நானும்


மனிதர்களை ஆக்குவதே உணர்வுகள் தான். உணர்வுகளை மறுத்த சமயமும்; உறவுகளை வெறுத்த அருள்வாழ்வும் ஆன்மீகமாகாது.

அழுவாரோடு அழுவதும், மகிழ்வாரோடு மகிழ்வதுமே உணர்வின் சரியான சமமான வெளிப்பாடாகும்.

கோபம், வருத்தம், மகிழ்ச்சி, துயரம், அழுகை, கவலை, சிரிப்பு, வலி, துயரம், காதல், பாசம், இப்படியாக அனைத்து உணர்வுகளும் நல்லதே.

உணர்வுகள் ஆக்கவும் செய்யும் அழிக்கவும் செய்யும். உணர்வுகளை கட்டுப்படுத்துவது என்பது ஆபத்திற்கு அழைத்துச்செல்லும். உணர்வுகளை கட்டாயப்படுத்துவது என்பது ஆளுமை சிதைவுக்கு வழிவகுக்கும். 

உணர்வுகளை உள்ளுர உணர்வதே வாழ்வின் ஆழத்திற்கு அழைத்துச்செல்லும்.


எனக்கு கோபம் வருகின்றபோது என்ன செய்வது என்று தெரியாமலே தீய விளைவுகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு பதிலாக எனக்கு கோபம் வருகின்ற போது நான் கோபப்படுகின்றேன் என்ற உள்ளுர உணர்வு எனக்கு இருந்தாலே கோபம் சரியாக கையாளப்படும்.

இப்படி ஒவ்வொறு உணர்வுகளையும் உள்ளுர உணர்தலே சரியாக உணர்வுகளை கையாளுவதற்கான முறையாகும்.

உணர்வுகள் ஊமையானால் உறவுகள் பொய்த்துவிடும். உண்மைகளே உணர்வானால் உறவுகள் மொட்டவிழ்க்கும்.