ஊடக உலகில் உண்மை ஊமையானால்...
இன்று உண்மையை உரைக்க கூறக்கூடிய ஊடகங்கள் கட்சி முலாம் பூசப்பட்டு கட்சிகளின் பூதக்கண்ணாடிகளாக காட்சி தருவதோடு தேர்தல் பிரச்சாரத்திற்காகவும் பயன்படுத்துகின்றன.
ஜெயா தொலைக்காட்சியில் உண்மை என்று சொல்லப்படுவது கலைஞர் தொலைக்காட்சியில் பொய் என்று வாதிடப்படுகின்றது. தனக்கு சார்புள்ள, தன்னை பாதிக்காத செய்திகளை தருவதில் தான் ஊடகங்கள் கவனம் செலுத்துகின்றன.
மெகா தொடர்கள் என்றப் பெயரில் விபச்சார கலாச்சாரத்தையே தமிழக ஒட்டு மொத்த கலாச்சாரம் என்று மிகைப்படுத்தி காட்டுகின்றன.
ஊடகங்களுக்கிடையேயான போட்டியின் காரணமாக விபாபார நோக்கில் விளம்பர வருமானத்தையுமே முன்னிருத்தி நிகழ்சிகள் தயாரிக்கப்படுகின்றன.
மக்கள் ஊடகங்களான கிராமிய கலைகள் மழுங்கடிக்கப்பட்டு நுணி நாக்கின் ஆங்கிலமே ஊடக மொழியாக பயன்படுத்தப்படுகினறன.
ஊடகத்தின் ஊமை தன்மையை அகற்றுவோம் ! உண்மை உரைக்கும் ஊடகம் காண உழைப்போம் !